செவ்வாய், 18 மே, 2010

நடராசர் திருமஞ்சனம்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பேரூர் அருள்மிகு பட்டிநாதர் திருக்கோவிலில் நடந்த விழாவில் சீர்வளர்சீர் அடிகளார்















2 கருத்துகள்:

  1. "அழகிய திருச்சிற்றம்பலம்"

    பாரூரும் அரவல்குல் உமைநங்கை

    அவள்பங்கன் பைங்கண் ஏற்றன்

    ஊருரன் தருமனார் தமர்செக்கில்

    இடும்போது தடுத்தாட் கொள்வான்

    ஆரூரன் தம்பிரான் ஆரூரன்

    மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்

    பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்

    றம்பலத்தே பெற்றா மன்றே.

    - சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்ததேவாரப் பதிகங்கள்
    ஓம் நமசிவாய!

    கனகசபை — அழகிய திருச்சிற்றம்பலம்


    என்று சுந்தரர் சிதம்பரத்தில் நின்றுகொண்டு பேரூரிலுள்ள நடராஜரின் அழகை மானசீகமாக கண்டு பாடினார். அதைக் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் "தில்லையில் நின்று கொண்டு பேரூரைப் பற்றி பாடும் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "அந்த அழகைக் காண கோடி கண்களும் போதாது. அந்தப் பரவசத்தை அனுபவித்துதான் உணரமுடியும்" என்றார்.

    உடனே பேரூருக்கு வந்த தில்லைவாழ் அந்தணர்கள் நடராஜரின் அழகைப் பார்த்து மயங்கி, சுந்தரர் சொன்னது உண்மைதான் என்றுணர்ந்து "சிதம்பரத்தில் இருப்பது திருச்சிற்றம்பலம் இங்கிருப்பதோ அழகிய திருச்சிற்றம்பலம்" என்று கூறிச் சென்றனர்.

    பதிலளிநீக்கு
  2. அழகிய திருச்சிற்றம்பல நாதர்

    பதிலளிநீக்கு