செவ்வாய், 29 ஜூன், 2010

தெய்வம் தெளிமின் தெளிந்தார் பேணுமின்

அன்புடையீர்,
போற்றி ஓம் நமசிவாய. திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனத்தின் இளைய பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கங்களின் அழைப்பை ஏற்று பெட்னா மாநாட்டிற்கு வருகை தர உள்ளார்கள்.மாநாட்டினைத் தொடர்ந்து அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க சைவம், யோகம்,தியானம், தமிழ்முறை வழிபாடு பற்றிய வகுப்புகளை எடுக்க உள்ளார். அடிகளாரது நிகழ்ச்சி நிரலை இத்துடன் இணைத்துள்ளோம். தாங்களும் கலந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

சூன் 29 மற்றும் சூலை 1 தாமரைக்கோவில்,
யோகாவில்,வர்ஜீனியா.
ஒருங்கிணைப்பாளர் ; திருமதி.புஸ்பா434 969 1161 .becky@moonstar.com, திரு.சதீஸ் 434 390 5266.
satishdaryanani@yahoo.com


சூலை 2 ஆரிஸ்பர்க் மற்றும் பிலடெல்பியா,பென்சில்வேனியா
சூலை3 முதல் 5 வரை பெட்னா தமிழ்ச்சங்கத் திருவிழா,
வாட்டர்பரி, கனெக்டிகட்
www.fetna.org
சூலை 6 , 7 பாஸ்டன், நியூயார்க்
சூலை 8 இன்டக்ரல் யோகா நிறுவனம்,நியூயார்க்.தொடர்பு எண்கள் 212 929 0585, 212 929 0586. info@iyiny.org, ramananda@iyiny.org



சூலை 9 நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க்

சூலை 10, 11 அருள்நெறிப் பயிற்சி வகுப்பு,எடிசன், நியூஜெர்சி யோகா,தியானம்,திருமுறை,வழிபாடு என குழந்தைகள் மற்றும் பெரியோர் அனைவருக்குமான எளிய நடைமுறை பயிற்சி வகுப்பு
திரு.செந்தில்நாதன் 848 702 6581
msenthilnathan@hotmail.com


சூலை12 முதல் 16வரை புளோரிடா
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் திரு.சிவக்குமார் அவர்களை 908 693 0198,, 732 516 9139 எண்களில் தொடர்பு கொள்ளலாம். kshivakumar@yahoo.com

ஞாயிறு, 20 ஜூன், 2010

அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ( பெட்னா )

திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனத்தின் இளையபட்டம் முனைவர் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23ஆம் ஆண்டு விழாவின் சிறப்பு அழைப்பாளராக கனெக்டிகட் மாநிலத்தில் வாட்டர்பரி நகரில் பேலஸ் தியேட்டர் எனும் அரங்கில் சூலை 3,4,5 நாட்களில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார் என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்










சனி, 19 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டில்''சமயம் வளர்த்த தமிழ் ''

செம்மொழி மாநாட்டில்''சமயம் வளர்த்த தமிழ் ''எனும் பொது அரங்கிற்கு தலைமை எற்று நடத்தும் சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையினை வாழ்த்தி அன்பர்கள் வைத்துள்ள வாழ்த்துப் பலகைகள்.














புதன், 16 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டில்''சமயம் வளர்த்த தமிழ் ''

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "சமயம் வளர்த்த தமிழ் " எனும் பொது அரங்கம் நடைபெறுகிறது.24.06.2010 வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் இவ்வரங்கத்திற்கு கயிலைக்குருமணி முதுமுனைவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் தலைமை ஏற்று நடத்துகின்றார்.அனைத்து சமய அன்பர்களும் பங்கேற்று உரையாற்றும் கருத்தரங்கத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

World Classical Tamil Conference