புதன், 14 அக்டோபர், 2009

சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையின் 86 வது நாண்மங்கல விழா

14.10.2009 அன்று புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு சீர்வளர்சீர் பேரூரடிகளார் அவர்கள் அடியார் பெருமக்களுக்கும்,அன்பர்களுக்கும்,மகளிர்களுக்கும்,குழந்தைகளுக்கும் புத்தாடை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
10மணி அளவில் மகம்நாள் வேள்வி வழிபாடு,சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையின் அருளார்ந்த தலைமையில் நடைபெற்றது.
10.30 மணி அளவில் அருள்மிகு சாந்தலிங்கப்பெருமானுக்கு பெருந்திருமஞ்சன வழிபாடு
11.30மணி அளவில் அலங்கார வழிபாடு,பேரொளி வழிபாடு நடைபெற்றது.
நண்பகல் 12.30 மணிஅளவில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் சீர்வளர்சீர் கயிலைக்குருமணி அவர்களின் நாண்மங்கல விழா வழிபாடு அடியார் பெருமக்கள் புடைசூழ இனிதே நடைபெற்றது.
பங்குபெற்ற அருளாளர்கள் ;
சிரவை ஆதீனம் தவத்திரு.குமரகுருபர அடிகளார்
பழனி சாதுசாமிகள் திருமடம் தவத்திரு.சாதுசண்முக அடிகளார்
தென்சேரிமலை திருநாவுக்கரசர் திருமடம் தவத்திரு.முத்துசிவராமசாமிஅடிகளார்
வராகி பீடம் தவத்திரு.மணிகண்ட அடிகள்
சின்மயா மிசன் அசித் சைதன்யா அவர்கள்
மற்றும் தொழிற்சார் நிறுவனத் தலைவர்கள்,மற்றும் சிவனடியார்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.














குருமகா சந்நிதானம் சிவனடியார்களுக்குச் சிறப்பு செய்கிறார்


புனித காணிக்கை அன்னை திருச்சபையைச் சேர்ந்த சகோதரிகளின் அன்புக் காணிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக