வெள்ளி, 6 மார்ச், 2009

தற்செல்வப்பிரிவு கல்லூரி 20 ஆவது ஆண்டு விழா

நாள் : 05.03.2009
நேரம் : காலை 9.00 மணி

விழா : தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி (தற்செல்வப்பிரிவு) குமாரதேவர் மாணாக்கர் அருள்நெறி இலக்கியமன்ற 20ஆவது ஆண்டு விழா.
திருமதி.ருக்மணி ஓதிச்சாமி அவர்கள் திருவிழக்கேற்றி விழாவினைத் துவக்கி வைத்தார்
கல்லூரியின் வணிகவியல் துறை விரிவுரையாளர் முனைவர்.ம.செயப்பிரகாசம் அவர்கள் வரவேற்புரை நல்கினார்
பேரூராதீனம் இளையபட்டம் தவத்திரு.மருதாசல அடிகளார் அவர்கள் அருளுரை வழங்கி சிறப்பித்தார்

குருமுதல்வர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அருளிய கொலைமறுத்தல் என்ற நூலை இராமகிருட்டிண தபோவனம் தவத்திரு சங்கரானந்தா சாமிகள் வெளியிட்டு மதுக்கரை திரு.ஆர்.கிருட்டிணசாமி, கோவை திரு.சி.ஆர்.பாசுக்கரன் மற்றும் தென்சேரிமலை அறங்காவலர் குழு தலைவர் திரு.பி.என்.வேலுச்சாமி அகியோர்கள் பெற்றுக்கொண்டனர்.
குருமுதல்வர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அருளிய அவிரோத உந்தியார் என்ற நூலை ஈரோடு எசு.கே.எம். நிறுவனத்தலைவர் திரு. எசு.கே.எம்.மயிலானந்தம் அவர்கள் வெளியிட்டு கோவை ரூட்சு நிறுவனத்தலைவர் திரு.கி.இராமசாமி மற்றும் கோவை செந்தில் மணலகம் உரிமையாளர் திரு.ஓ.ஆறுமுகசாமி அகியோர்கள் பெற்றுக்கொண்டனர்.
இராமகிருட்டிண தபோவனம் தவத்திரு சங்கரானந்தா சாமிகள் மகிழ்வுரை நல்கினார்
மேனாள் துனைவேந்தர் முனைவர் திரு.சி.சுப்பிரமணியம் மற்றும் ஈரோடு எசு.கே.எம். நிறுவனத்தலைவர் திரு. எசு.கே.எம்.மயிலானந்தம் அகியோர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர்.கோ.ந.முத்துக்குமாரசாமி அவர்கள் நூல் கருத்துரை வழங்கினார்.
தென்சேரிமலை அறங்காவலர் குழு தலைவர் திரு.பி.என்.வேலுச்சாமி அவர்கள் கல்லூரி மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
வணிகவியல்துறை விரிவுரையாளர் திரு.கு.கிரீசுகிருட்டினன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக