புதன், 4 மார்ச், 2009

குடமுழுக்கு நிகழ்ச்சிகள்

மாசித்திங்கள் 20 ஆம் நாள்( 04.03.2009 ) புதன்கிழமை இரவு 8.00 மணி
தமிழ் வேள்வித் தலைமை :தவத்திரு.சிவலோக நாத அடிகள் அவர்கள்
திருவிளக்கு,புனிதநீர்,ஆனைந்து,மூத்த பிள்ளையார்,ஐம்பூத,திருமகள்,நிலந்தேவர்,புற்றுமண்,முளைப்பாலிகை வழிபாடுகள்,காப்பணிவித்தல்.

மாசித்திங்கள் 21 ஆம் நாள் ( 05.03.2009 ) வியாழக்கிழமை`,காலை 7.45 மணி
தலைமை : பீடம் தவத்திரு.பொன்மாணிக்க வாசக அடிகளார்
மூத்த பிள்ளையார் வேள்வி வழிபாடு
இரவு 8.00 மணி
தலைமை : தவத்திரு.குமரகுருபர அடிகளார்

திருக்குடங்களில் திருவருள் சக்திகளை எழுந்தருளச் செய்தல்,
முந்தை மாதவ பவத்தால் பரவு திருக்கோயிலிலிருந்து திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளல்,உலகனைத்தும் விற்றளித்திட்டாலும் விலைமேவா பாசுரம் அளித்த கற்றவர் தொழுது ஏத்தும் வெற்புயர் தீபம் தந்த சாந்தலிங்கருக்கு முதற்கால வேள்வி,திருமஞ்சன ஆகுதி,திரவிய ஆகுதி,நிறை ஆகுதி,மலர் வழிபாடு,திருமுறை விண்ணப்பம்,பேரொளி வழிபாடு,அருட்திருநீறு வழங்குதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக